அவருக்காக சஞ்சு சாம்சன் பின் வரிசையில் இறங்க வேண்டி வந்தது. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில்லின் தேர்வு கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கில்லை அணியில் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ஆனால் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கில்லை உள்ளேக் கொண்டு வரும் முடிவில் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.