ரத்தவெள்ளத்தில் இளம்பெண்.. உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (17:00 IST)
கடலூர் மாவட்டம் கார்மாங்குடியை சேர்ந்த ஸ்ரீதர், குறிஞ்சிப் பாடியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்தார்.

அப்பெண்ணை அவர் திருமணம் செய்து வந்த நிலையில், அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அப்பெண்ணுடன் தனிமையில் பேச வேண்டுமென அவரை வெள்ளாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அவரைக் கத்தியால் தாக்கினார். அருகில் உள்ளவர்கள் பெண்ணை மருத்துவமனைக்கு கொடு சென்றனர்.  இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் போலீஸார் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஸ்ரீதரைக் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அங்குப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்