பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...6 பேர் படுகாயம்

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:36 IST)
கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து  ஒன்று சாலையோரப் பக்கத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிசாலையில் அரசு பஸ் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில்,  ஓட்டுநர்  ,  நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்