105 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (07:05 IST)
கடந்த 105 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியதால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய்க்கு 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் முடிந்து விடும் என்பதால் அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்