ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் என்று ட்ரம்ப் அறிவித்து சில மணி நேரங்களிலேயே மீண்டும் இரு நாடுகளும் தாக்கிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய தரைக்கடலில் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான், இஸ்ரேல் மீது மட்டுமல்லாமல் தற்போது கத்தார் மீதும் தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும்பான்மையான நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் பேசி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைத்துள்ளதாக கூறினார். அதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஈரான் போர் நிறுத்தத்திற்கு விருப்பம் தெரிவித்தது என்றும் ஆனால் அமெரிக்கா தலையீட்டை விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இஸ்ரேல் தங்களது வான்படையை ஈரான் மீது ஏவியது. அதற்கு இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப் உடனடியாக வான் படைகளை திரும்ப பெறுமாறு கூறினார். ஆனால் அதை இஸ்ரேல் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இரு நாடுகளும் போரில் ஈடுபட்டது குறித்து பேசிய ட்ரம்ப், இஸ்ரேல், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டன. ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மறுக்கட்டமைப்பு செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இருநாடுகளும் தனது உறுதியில் இருந்து காலை வாரி விட்டது ட்ரம்ப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K