மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில், அதாவது இன்று காலை 10 மணிக்குள், திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும் என்றும் இன்று சில மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.