தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:44 IST)
வங்க கடலில் உருவான குலாப் புயல் கரையை கடந்த நிலையில் இன்று தேனி, திண்டுக்கலில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குலாப் புயலாக உருமாறிய நிலையில் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று தேனி, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்