ஆக.21 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (15:14 IST)
ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனழை பெய்யும் என தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்