தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கென தனி மாநில கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு, 2022-ல் அமைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த கூடாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.