'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

Siva

திங்கள், 27 அக்டோபர் 2025 (15:47 IST)
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது 'மோந்தா' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு பருவமழைக் காலத்தின் முதல் புயல் ஆகும்.
 
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி, புயல் சென்னையில் இருந்து சுமார் 480 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. புயலின் நகரும் வேகம் மணிக்கு 18 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
 
'மோந்தா' புயல், நாளை காலை தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெற்று, நாளை மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே தீவிரப் புயலாகக் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
 
இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாளை ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவின் தெற்குப் பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தின் 9 துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்