தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இனி மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களை 'நோயாளிகள்' என்று அழைக்காமல், 'மருத்துவப் பயனாளிகள்' என்று அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
சிகிச்சை பெற வருபவர்களை 'நோயாளி' என்று அழைக்காமல், அவர்களை மருத்துவ சேவைகளின் பயனாளிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த புதிய கோரிக்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம், மருத்துவத் துறையில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.