'கழுதைப் பாதை' என அழைக்கப்படும் சட்டவிரோத வழியில் செல்ல, இந்த இளைஞர்கள் தங்கள் நிலங்களை விற்று, தரகர்களுக்கு பெருந்தொகை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தரகர்களிடம் ரூ.57 லட்சம் வரை கொடுத்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், கௌதமாலா, மெக்சிகோ போன்ற எல்லைகளை கடக்க கூடுதல் கட்டணங்கள் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
தரகர்களின் வாக்குறுதிக்கு மாறாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தற்போது நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து, சட்டவிரோத குடியேற்றம் கடும் தண்டனைக்குரிய குற்றம் என்றும், ஏமாற்றும் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.