காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த இந்தியா, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும் ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்றும் உறுதியாக நிற்கும். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முழு ஆதரவு" என தெரிவித்துள்ளார்.