பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியா “ஆபரேஷன் சிந்துர்” எனப்படும் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், பஹாவல்பூர், முத்திர்கே உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியது.
ஏர் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சந்திகர், ராஜ்கோட் ஆகிய 9 நகரங்களுக்கு செல்லும் மற்றும் வருகிற விமானங்கள் இன்று மதியம் 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலவரத்தை பொறுத்து இது நீடிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.