இந்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை அவசரமாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் ராணுவ தளவாடங்களை குறிவைத்து எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.