பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (21:11 IST)
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.
 
 இன்று முதல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது
 
இந்த நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார் 
 
இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை மத்திய அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்