கோவையில் 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் பேசி பழகி அதன் பின்னர் அறைக்கு வரவழைத்து 7 மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அந்த இளைஞரை பார்க்க சிறுமி சென்றபோதுதான் அந்த அறையில் இருந்த ஏழு மாணவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் தான் காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த ஏழு மாணவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்/