ஆளில்லா சிறிய ரக விமானம்: திருவள்ளூர் அருகே இறங்கியதால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (18:13 IST)
ஆளில்லா சிறிய ரக விமானம்:
உலகின் பல பகுதிகளில் ஆளில்லா சிறிய விமானங்கள் அவ்வப்போது தரையிறங்கி பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறித்து செய்திகளை பார்த்து வருகிறோம். இவ்வகை விமானங்கள் எதிரி நாட்டின் உளவு விமானங்கள் என்றும் கருதப்படும்
 
இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தரையிறங்கியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமானம் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சற்று முன்னர் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே இன்னொரு ஆளில்லா சிறிய ரக விமானம் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஐந்து நாட்களில் இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒரே இடத்தில் தரையிறங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானங்கள் எங்கிருந்து வந்தன? யார் அனுப்பி உள்ளனர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்