சட்டக்கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு: அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (11:06 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை நேற்று அறிவித்தது. இதனால் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்றும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாது என்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது இதனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்