சாதியை ஒழிக்கும் கிராமத்திற்கு பரிசு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (14:29 IST)
தமிழகத்தில் சாதியை ஒழிப்பதில் முன்னொடியாக விளங்கும் கிராமத்திற்கு சிறப்பு பரிசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை தாண்டி விட்ட போதிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பல இடங்களில் தொடர்ந்து வருவதும், மோதல்கள் நிகழ்வதும் வாடிக்கையான செய்திகளாகவே உள்ளன. இந்நிலையில் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை களைந்து சமத்துவத்துடன் மக்கள் வாழ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது.

அந்த வகையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முன்னொடியாக செயல்படும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு ஊக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்