அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ்.. மீண்டும் புழல் சிறையில் அடைப்பு..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (09:00 IST)
கடந்த சில நாட்களாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர்  ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பல்வேறு ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அவரது உடல் சீரான நிலையில் அவரது காவல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து  அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்