அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு EEG சோதனை.. மருத்துவர்கள் கூறிய முக்கிய தகவல்..!

ஞாயிறு, 26 நவம்பர் 2023 (10:08 IST)
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு EEG சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது  ஈஜி எனப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்  மூளையின் செயல் திறனை கண்டறியும் வகையில் இந்த பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் பரிசோதனை முடிவுகளை நரம்பியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அவருக்கு எEEG னப்படும்  மூளை  நரம்பியல் சோதனை செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்