சராசரியை விட சரமாரியாக கொட்டி தீர்த்த மழை!

வெள்ளி, 1 நவம்பர் 2019 (17:49 IST)
தமிழகத்தில்  கடந்த மாதம் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குமரிக்கடல் பகுதியில் உருவான கியார் மற்றும் மஹா புயல்கள் தமிழகத்தை நேரடியாக நெருங்காத நிலையில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. ஆம், இந்த ஆண்டு ஆக்டோபர் 15 ஆம் தேதியே வடகிழக்கு பருவமழை துவங்கியது. 
 
இந்நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சராசர்யாக பெய்ய வேண்டிய மழை அளவு 17 செ.மீ என்ற நிலைய்ல் இந்த ஆண்டு 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 27% கூடுதலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவ்ல் வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்