"அழிவுகரமான பயங்கரங்களுக்கு மத்தியில், கலையின் ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்தும், அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட ஒட்டுமொத்த படைப்புகளுக்காக" அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
1954 இல் பிறந்த கிராஸ்னாஹோர்காய், 1985 இல் வெளியிட்ட தனது முதல் நாவலான 'சாடண்டாங்கோ' மூலம் ஹங்கேரியில் புகழ் பெற்றார். இவரது சமீபத்திய நாவலான 'ஹெர்ஷ்ட் 07769' , ஜெர்மனியின் சமூக அமைதியின்மையை துல்லியமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்டது.
நோபல் கமிட்டி இந்த நாவலை, "வன்முறையும் அழகும் சாத்தியமற்ற முறையில் இணைந்ததைப் பற்றியது" என்று விவரித்துள்ளது. இவரது 'சீயோபோ தேர் பிலோ' என்ற சிறுகதை தொகுப்பு, நிலையற்ற உலகில் கலையின் பங்கைப் பேசுகிறது.