கோவையில் உள்ள வார்டு 1 பகுதியில் தொடர்ந்து தெருநாய் கடி தாக்குதல்கள் நடந்து வருவதால், உள்ளூர் மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், "எங்கள் பகுதியில் நிறைய தெருநாய்கள் உள்ளன. நாங்கள் அமைதியாக சென்றால்கூட, பின்னால் வந்து கடித்துவிடுகின்றன." மேலும், தெருநாய் கடியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
"கால்நடை அமைச்சகமோ அல்லது சுகாதார அமைச்சகமோ இதற்கு பொறுப்பேற்பதில்லை" என்று குற்றம்சாட்டிய கார்த்தி சிதம்பரம், "பிரதமர் ஒரு தேசிய பணிக்குழுவை அமைத்து இதற்கு நிதியளித்து பிரச்சினையை கையாள வேண்டும்" என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.