ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

Siva

புதன், 23 ஜூலை 2025 (17:47 IST)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேரை ஒரு தெரு நாய் கடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
கோவையில் உள்ள வார்டு 1 பகுதியில் தொடர்ந்து தெருநாய் கடி தாக்குதல்கள் நடந்து வருவதால், உள்ளூர் மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், "எங்கள் பகுதியில் நிறைய தெருநாய்கள் உள்ளன. நாங்கள் அமைதியாக சென்றால்கூட, பின்னால் வந்து கடித்துவிடுகின்றன." மேலும், தெருநாய் கடியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த முக்கியமான பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தின்போது  கொண்டு வந்தார். அவர் இதை ஒரு பொது சுகாதார நெருக்கடி என்று வலியுறுத்தினார்.
 
"இது தெருவில் உள்ள மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளன. இதனால் ரேபிஸ் நோய் பரவி வருகிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
"கால்நடை அமைச்சகமோ அல்லது சுகாதார அமைச்சகமோ இதற்கு பொறுப்பேற்பதில்லை" என்று குற்றம்சாட்டிய கார்த்தி சிதம்பரம், "பிரதமர் ஒரு தேசிய பணிக்குழுவை அமைத்து இதற்கு நிதியளித்து பிரச்சினையை கையாள வேண்டும்" என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்