எங்கெல்லாம் நம்முடைய பெரியவர்கள் இருக்கிறார்களோ, அங்கே முறையான பூஜைகள், வழிபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும், சன்னியாசிகள் முன் தரையில் அமர்கிறார்களே, அதுதான் உண்மையான ஆன்மீக ஆட்சி.
தமிழகத்தில் விரைவில் ஆன்மீக ஆட்சி அமையும் என்றும், இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் இனி பயணிப்பேன் என்றும் அவர் கூறினார்.