'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில் எத்தனை மனுக்கள்: முதல்வர் தகவல்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (14:43 IST)
தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதற்கென ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தார். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன என்பதும் அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்தத் துறையில் முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பது குறித்தும் முழுமையாக தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் எத்தனை என்பது குறித்து முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
 
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன! அவர்களில் 12 பயனாளிகளுக்கான பலன்களை #HBDKalaignar98 நாளான இன்று நேரில் வழங்கினேன். மீத மனுக்களின் குறைகளையும் விரைவில் தீர்ப்போம்! என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்