இன்று காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (07:15 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழ எடுத்து சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மேற்கண்ட 11 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்."


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்