பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை: 20 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Mahendran

செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:25 IST)
இன்று பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று பகல் ஒரு மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 20 மாவட்டங்களில் விவரங்கள் இதோ:
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுவை மற்றும் காரைக்கால்.
 
வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றி வேகம் மாறுபாடு காரணமாக, மழை குறித்த முன்னெச்சரிக்கை விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான காரணமாக, மேற்கண்ட 20 மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்