இன்னும் சற்று நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையில் இருந்து, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வரை 'அமைதிப் பேரணி' நடைபெற உள்ளது. இந்த பேரணியில், தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!