சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

Mahendran

புதன், 6 ஆகஸ்ட் 2025 (13:10 IST)
பீகார் மாநிலம் தர்பங்காவில், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால், மருத்துவமனை வளாகத்தில் வைத்து தனது மருமகனை மாமனாரே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பி.எஸ்.சி (நர்சிங்) இரண்டாம் ஆண்டு மாணவரான ராகுல் குமார் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த தன்யா பிரியா என்ற மாணவியை காதலித்து நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
 
இவர்களின் கலப்புத் திருமணத்திற்கு தன்யாவின் குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.நேற்றிரவு தன்யாவின் தந்தை பிரேம்சங்கர் ஜா, ராகுலை தேடி வந்துள்ளார். அப்போது, தன்யா பிரியா கண்முன்னேயே, ராகுலை மார்பில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றுள்ளார். சுட்டவுடன் ராகுல் உடல் தன்யாவின் மடியில் விழுந்து உயிர் பிரிந்தது.
 
தாக்குதல் நடத்தியது எனது தந்தைதான். அவரிடம் துப்பாக்கி இருந்தது. என்னையும் எனது கணவரையும் எனது தந்தை மற்றும் சகோதரர்கள் தாக்கலாம் என்று நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம்" என்று தன்யா பிரியா கண்ணீருடன் கூறினார்.
 
இந்த சம்பவத்தைக் கண்ட ராகுலின் சக மாணவர்கள், பிரேம்சங்கர் ஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த பிரேம்சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம், சாதி மறுப்பு திருமணம் குறித்த சமூகத்தின் பிடிவாதமான மனநிலையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்