சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் இன்று காலை ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு மாடிகளைக் கொண்ட அந்த கடையின் முதல் தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, ஒருசில நிமிடங்களில் பரவியது.
விபத்து குறித்து மேற்கு மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப கட்ட தகவலின்படி, கடையின் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.