12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த கட்டிடத்தில், அமலாக்கத்துறை அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த தீ விபத்தால் பல முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதம் அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், கம்ப்யூட்டரில் ஆவணங்கள் சேவ் செய்து வைத்திருப்பதால், அவற்றை மீட்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.