கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!

Siva
திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:46 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் செல்ல இருப்பதை எடுத்து அந்த பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க திண்டுக்கல் எஸ்பி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் இதனை அடுத்து தேர்தல் முடிந்தவுடன் அவர் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை திமுக தரப்பு மறுத்த நிலையில் கொடைக்கானலுக்கு தான் அவர் ஓய்வெடுக்க சொல்லப் போகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானலுக்கு முதல் தனது  குடும்பத்தினருடன்  ஓய்வு எடுக்க செல்ல இருப்பதை அடுத்து கொடைக்கானலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் மே 4ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கொடைக்கானல் பகுதியில் ட்ரோன்கள் பலூன்கள் பறக்க தடை என்று திண்டுக்கல் எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்