அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் பரிந்துரை செய்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
"ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா என பாகிஸ்தானியர்களிடம் நான் கேட்கிறேன்," என்று ஒவைசி சாடினார். மேலும், அமெரிக்காவின் இந்தத்தாக்குதல், "பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்குத்தான் உதவியாக உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.