இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

Mahendran
செவ்வாய், 4 மார்ச் 2025 (10:16 IST)
சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஒருவர், இரவு முழுவதும் தனது சக தோழிகளுடன் மது அருந்தியதாகவும், காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்ததாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து படித்துக் கொண்டிருந்த நிலையில், அவருடன் இரண்டு மாணவிகள் தங்கி இருந்தனர்.
 
இந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் மாணவிகள் மது அருந்தியதாகவும், மறுநாள் காலை அஸ்வினிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, சக மாணவிகள் அவரை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மது போதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக உயிரிழந்தாரா என்பது, பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என்றும், அதன் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்