அறநிலையத்துறை சார்பில் புதிய வணிகத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!

J.Durai

வெள்ளி, 26 ஜூலை 2024 (17:07 IST)
கன்னியாகுமரி விவேகானந்தாபுரம் பகுதியில், பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய நிகழ்வை தொடர்ந்து. சம்பந்தப்பட்ட இடத்தில் குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் இடும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் துளசிதரன் நாயர், ராஜேஷ்,சுந்தரி, ஆகியோர் பங்கேற்று செங்கலை எடுத்துக் கொடுக்கும் நிகழ்வில். கன்னியாகுமரி சட்டமன்ற அ.தி.மு.க., உறுப்பினர் தளவாய் சுந்தரமும் பங்கேற்றது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
 
கன்னியாகுமரியில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 20 கடைகளுடன் கூடிய அதி நவீன வளாகம் ரூ.2 -கோடி செலவில் கட்டப்பட்ட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்