இருமல் மருந்து குடித்த 6 குழந்தைகள் பரிதாப மரணம்.. விசாரணைக்கு உத்தரவு..!

Siva

புதன், 1 அக்டோபர் 2025 (15:07 IST)
மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உடல்நலக்குறைவு மற்றும் உயிரிழந்தது குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மற்றும்  இராஜஸ்தானின் சீக்கர் மாவட்டத்தில் மாநில இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகளும், ராஜஸ்தானில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது.
 
இதையடுத்து உடனடியாக தேசிய நோய் கட்டுப்பாடு மையத்திலிருந்து ஒரு மத்திய குழு சிந்த்வாராவுக்கு சென்று, தண்ணீர், பூச்சிகள் மற்றும் மருந்து மாதிரிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் இருமல் மருந்து தானா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் நான்கு வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், இந்த இருமல் மருந்து குழந்தைகளுக்குப் பயன்படுத்த ஏற்றதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்