கொரொனாவைவிட கொடியது பாஜக அரசு- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (19:39 IST)
மொழிப்போர் வீர வணக்க  நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பாஜக அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கு காரணம் இந்தி பேசும் மக்களை ஏமாற்றத்தான் என்று   தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அதில், பாஜகவிற்கு வாக்களிக்கும் வட மாநில மக்களுக்காவது குறைந்தபட்சம் ஏதாவது செய்திருக்கிறார்களா?

பாஜக அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கு காரணம் இந்தி பேசும் மக்களை ஏமாற்றத்தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா கால ஊரடங்கு போடப்பட்டதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்குக் கூட பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. பல நூறு கிமீ தூரத்திற்கு மக்கள் நடந்து சென்றனர்.  அப்படியென்றால் கொரொனாவைவிட  கொடியது பாஜக அரசு. ராமர் கோயிலை காண்பித்து மக்களை திசைதிருப்புகிறார்கள் என்று  என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்