சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை உயிருடன் கொளுத்திய கிராம மக்கள்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (09:39 IST)
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்த இருவரை கிராமத்தினர் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜார்கண்ட் மாநிலம் கும்லா என்ற மாவட்டத்தில் சிறுமி ஒருவர் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதனை அடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சுனில் ஓரான், ஆஷிஷ் ஓரான் ஆகிய இருவரையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிராமத்தினரை அழைத்து சென்றனர். 
 
அப்போது இருவரையும் சரமாரியாக அடித்த கிராம மக்கள் இருவரையும் உயிருடன் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். சுனில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆஷிஷ் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்