கடலூரில் 7 பெண்கள் நீரில் மூழ்கி பலி! - பிரதமர் மோடி இரங்கல்!

திங்கள், 6 ஜூன் 2022 (12:30 IST)
கடலூரில் ஆற்றில் குளிக்க சென்ற 7 இளம்பெண்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அருங்குணம் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அதில் 6 பேர் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாததால் உயிரிழந்துள்ளனர். ஒரே சமயத்தில் 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்