மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 சிறுமிகள் உயிரிழப்பு

வியாழன், 9 ஜூன் 2022 (16:32 IST)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெங்காசிமாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளா காசி நாதபுரம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகள்(7). இவர் அங்குள்ள பள்ளீய்ல் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா(6). அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் இரு சிறுமிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் தென்காசி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்