தப்பு செஞ்சா நேரடி ஆக்‌ஷன்; ட்விட்டர் இனி சோசியல் மீடியா இல்ல!? – அரசு வட்டாரங்கள் தகவல்!

புதன், 16 ஜூன் 2021 (10:06 IST)
இந்திய அரசின் புதிய சட்டத்திட்டங்களை ஏற்காததால் இனி ட்விட்டர் இண்டர்மீடியேட் அங்கீகாரத்தில் இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அதை ஏற்காத சோசியல் மீடியா நிறுவனங்கள் மீது நீதிமன்ற சம்மன் அனுப்பி விளக்கம் பெறப்பட்டது. இந்திய அரசின் கொள்கைகளை ஏற்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பல சோசியல் மீடியா நிறுவனங்களும் அரசின் கொள்கைகளை ஏற்றன. ஆனால் ட்விட்டர் இந்திய அரசின் கொள்கைகளை ஏற்பதில் கால தாமதம் செய்து வந்த நிலையில் அதன் இண்டர்மீடியேட்டர் என்ற அங்கீகாரம் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகள் இட்டால் பதிவிடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இண்டர்மீடியேட்டர் அங்கீகாரத்தை ட்விட்டர் இழந்தால் ட்விட்டரில் வெளியாகும் பதிவுகளுக்கு ட்விட்டரே பொறுப்பு என்பதால் நேரடியாக ட்விட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்