அவர் வந்தா நான் வரமாட்டேன்… தனுஷின் கோபம்!

புதன், 9 ஜூன் 2021 (17:46 IST)
நடிகர் தனுஷுக்கும் ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்துக்கும் இடையே படத்தின் ஓடிடி ரிலிஸ் காரணமாக பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இந்த படம் நெட்பிளிக்ஸில் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டர் தளத்தின் ஸ்பேஸில் கலந்துகொண்டு பேசினார். அதைக் கேட்க ஒட்டுமொத்தமாக 17 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர். இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை இதுவாம். 

ஆனால் இந்த உரையாடல் ஒன்றரை மணிநேரம் தாமதமாக தொடங்கியதாம். அதற்கு காரணம் என்னவென்றால் தனுஷ் கலந்துகொண்ட உரையாடலில் தயாரிப்பாளர் சஷிகாந்தும் கலந்துகொள்ள இருந்ததால் தான் கலந்துகொள்ள மாட்டேன் என தனுஷ் உறுதியாக சொல்லிவிட்டாராம். அதன் பிறகு சஷிகாந்த் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லிய பின்னர்தான் தனுஷ் வந்தாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்