1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் உற்சாகம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:45 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் 1100 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்ததை அடுத்து 60 ஆயிரத்தை சென்செக்ஸ் தாண்டியுள்ளது.  இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் 61 ஆயிரத்தை தொட்டு விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 307 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 17 ,977க்க்கும் மேல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்