காவல்துறை துணை ஆணையர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "ஜூன் 20 அன்று, தாய் தனது இரண்டு மகள்களுக்கும் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரின் நிலையும் மோசமாக இருந்தது. இரு சிறுமிகளுக்கும் வயிற்று வலியும், மன அழுத்தமும் இருப்பதாக தாய் மருத்துவரிடம் கூறியுள்ளார். மருத்துவர் விசாரித்தபோது அந்த சிறுமிகளின் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மருத்துவர் தான் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால் சிறுமிகளின் தாய் புகார் அளிக்க மறுத்ததாகவும், அவருக்கும் சிறுமிகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆலோசனை வழங்கியதாகவும், இந்த ஆலோசனை வழங்கும் நிகழ்வை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.