மாணவன் ஒருவன் கொண்டு வந்த பெப்பர் தூள் ஸ்பிரேயை, வகுப்பறையில் மின்விசிறிக்கு கீழே அடித்ததால், அங்கு இருந்த ஒன்பது மாணவர்களும், அவர்களுக்கு உதவ வந்த ஒரு ஆசிரியரும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலையிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்களின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது. எனினும், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஒரு மாணவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.