முன்னாள் அமெரிக்க தூதர் ரஹ்ம் இம்மானுவேல், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்திய-அமெரிக்க உறவுகளை சிதைத்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 40 ஆண்டுகால திட்டமிடலை டிரம்ப் வீணாக்கியதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக கூறப்பட்ட போர் நிறுத்தத்திற்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்பை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்க மறுத்ததே உறவில் விரிசல் ஏற்பட முதல் காரணம். டிரம்ப் தனது அகங்காரத்தின் காரணமாகவே இந்திய உறவை புறக்கணித்தார்.
இது ஒரு பெரிய தவறு என்று இம்மானுவேல் கண்டித்தார், இதன் மூலம் சீனா தனது ஆதிக்கத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவின் இந்த தவறுகளை சீனா பயன்படுத்தி கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.