‘மத்ஸ்யா 6000’ : கடலடி ஆய்வு செய்ய இந்தியா திட்டம்!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (12:59 IST)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.

இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

பூமியை 4 சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி விரிவடைந்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான எல்-1 பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.

இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்துதலில் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்த  நிலையில் சந்திரயான்3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து,  கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக, இந்தியா ‘மத்ஸ்யா6000’ என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தை  சுமார் 6 கிலோ மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த வாகனத்தில் 3 ஆய்வாளர்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த மத்ஸ்யா 6000 வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் ( என்ஐஓடி ) வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்