தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெய்ப்பூரில் உள்ள 'தியோஹார்' நிறுவனம், தங்க மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ஆடம்பர இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டய கணக்காளராக இருந்து உணவு புதுமையாளராக மாறிய அஞ்சலி ஜெயின் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
இவர்களின் 'தங்க ஸ்வீட் வகைகளில், மிகவும் விலை உயர்ந்த இனிப்பு 'ஸ்வர்ண பிரசாதம்' ஆகும். இதன் ஒரு கிலோ விலை ரூ. 1,11,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தின்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கருதப்படும் தங்க சாம்பலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வர்ண பஸ்ம் பாரத் (ஒரு கிலோ ரூ. 85,000), 24 காரட் முந்திரி கட்லி (ஒரு கிலோ ரூ. 3,500) போன்ற மற்ற விலையுயர்ந்த இனிப்புகளும் விற்பனைக்கு உள்ளன.